அங்குலானை பிரதேசத்தில் 24 வயதுடைய பெண் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்
இந்த சம்பவம் சயுரபுர அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.
முதற்கட்ட விசாரணைகளின்படி, திருமணத்திற்கு புறம்பான தொடர்புடைய நபருடன் பெண்ணுக்கு ஏற்பட்ட தகராறு காரணமாக, அவர் மீது தாக்குதல் நடந்ததாக தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை அங்குலானை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.







No comments