தைப்பொங்கல் தினத்தை சிறப்பாக கொண்டாடும் முகமாக கேமாஅறக்கட்டளையினால் காங்கேசன்துறை மேற்கு J /233 காங்கேசன்துறை மத்தி J/234 மற்றும் மாவிட்டபுரம் J/231 பிரிவுகளில் வசிக்கும் தெரிவிசெய்யப்பட்ட 24 குடும்பங்களுக்கு பொங்கல் பொருட்கள் நேற்றைய தினம் புதன்கிழமை வழங்கப்பட்டன.
குறித்த பொங்கல் பொதிகள் மீள்குடியேறிய முதியோர் மற்றும் பெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கு அவர்களது கிராமசேவகர் அலுவலகங்களில் கிராமசேவகர் , அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கேமா அறக்கட்டளையினரினால் வழங்கிவைக்கப்பட்டன.
கனடாவில் வசிக்கும் அருந்ததி குறித்த பொங்கல் பொதிக்கான நிதி பங்களிப்பினை வழங்குயிருந்ததோடு காங்கேசன்துறை சக்தி பல்பொருள் வாணிபமும் இணை அனுசரணை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

















No comments