யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நாவலர் வீதியை சேர்ந்த கனகரத்தினம் கனகதாசன் (வயது 62) என்பவரே உயிரிழந்துள்ளார்
கடந்த 18ஆம் திகதி யாழ். நகர் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் , படுகாயமடைந்த நிலையில் , சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றைய தினம் புதன்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.







No comments