முறிகண்டி பகுதியில் புகையிரத்துடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த தம்பதியினர் படுகாயமடைந்த நிலையில் , கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புகையிரத கடவையை கார் கடக்க முற்பட்ட வேளை யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த புகையிரத்துடன் மோதி விபத்துக்குளாகியுள்ளது.
விபத்தில் காரில் பயணித்த கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் காரில் இருந்து , மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.









No comments