வவுனியா குடியிருப்பு பூந்தோட்டம் வீதியில் இயங்கிவந்த மாவா பாக்கு விற்பனை நிலையம் முற்றுகையிடப்பட்டு, பொலிசாரால் ஆறுபேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்
மாவா என்ற தடைசெய்யப்பட்ட பாக்கு விற்பனை தொடர்ச்சியாக இடம்பெற்றுவருவதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டியிருந்தனர்.
இந்நிலையில் குறித்த பகுதியை முற்றுகையிட்ட பொலிசார் கடையை நடாத்திச்சென்ற ஒருவரை கைதுசெய்துள்ளதுடன்,மாவா பாக்கினை கொள்வனவு செய்வதற்காக சென்றிருந்த மேலும் ஐந்துபேரையும் கைதுசெய்துள்ளனர்.
அங்கிருந்து பாக்குகளும் வேறு பொருட்களும் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் முன்னிலை படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.









No comments