யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் உள்ள குளமொன்றில் இருந்து இனம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது
வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கு முன்பாக உள்ள குளமொன்றில் சடலம் மிதப்பதாக அச்சுவேலி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு , உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் சுமார் 50 வயது மதிக்க தக்கவர் எனவும் , அடையாளம் காண உதவுமாறும் பொலிஸார் கோரியுள்ளனர்.









No comments