Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். 827 குடும்பங்களுக்கு 20 இலட்ச ரூபாய் பெறுமதியான வீட்டு திட்டம்


2026 ஆம் ஆண்டுக்கான வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கு காசோலை வழங்கும் நிகழ்வும் 2025 ஆம் ஆண்டு வீடமைப்பு வழங்கப்பட்டவர்களுக்கான ஆவணம் வழங்கும் நிகழ்வும் யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன்  தலைமையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 

இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர்   டீ.பி சரத்தும், சிறப்பு விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர்களான   கருணநாதன் இளங்குமரன்,   ஜெயசந்திரமூர்த்தி றஜீவன்,  சண்முகநாதன் சிறிபவானந்தராஜா ஆகியோர் பங்குபற்றினார்கள்.

மாவட்டத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தலா ரூபா 02 மில்லியனில் நடைமுறைப்படுத்தப்படும் 827 வீடுகளில் 125 பயனாளிகளுக்கு முதற்கட்டமாக 4 இலட்சம் ரூபாய் வீதம் காசோலை வழங்கப்பட்டதுடன், 2025 ஆம் ஆண்டு பூர்த்தி செய்யப்பட்ட வீடுகளில் முதற்கட்டமாக 180 பயனாளிகளுக்கு வீடமைப்புத் திட்டத்திற்கான ஆவணங்கள் கையளிக்கப்பட்டன. 






No comments