சமுர்த்தி வீடமைப்புத் திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொழும்புத்துறை J/61 கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த பயனாளிக் குடும்பத்திற்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டினை நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
ஒரு வீடு என்பது வெறும் கட்டிடம் அல்ல, அது ஒரு குடும்பத்தின் பாதுகாப்பு, நம்பிக்கை மற்றும் எதிர்காலத்தின் அடித்தளம்.
அந்த அடித்தளத்தை வலுப்படுத்துவதே எமது அரசாங்கத்தின் மக்கள் மையப்படுத்தப்பட்ட அபிவிருத்திக் கொள்கையாகும்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், சமூக நீதியையும் சமத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்டு, வீடற்ற மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு பாதுகாப்பான வாழ்விடத்தை உறுதிப்படுத்தும் பணியை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகிறது.
புதிய இல்லத்தைப் பெற்ற குடும்பத்தினருக்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இல்லம் வளமும், அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வின் தொடக்கமாக அமைய வாழ்த்துகிறேன் என கடற்தொழில் அமைச்சர் தெரிவித்தார்.









No comments