அனைத்து இந்து ஆலயங்களும் இந்து கலாசார திணைக்களத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், பதிவு செய்வதன் மூலமே அரசாங்கத்தின் நிதியுதவிகள் மற்றும் நலத்திட்டங்களைப் பெற முடியும் என்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
பதிவு செய்யப்படாத ஆலயங்கள் தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு பதிவு செய்யப்படும் ஆலயங்களுக்கு மட்டுமே நிதி மற்றும் ஏனைய உதவிகளைப் பெற முடியும் என பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி பதிவு செய்யப்படாத ஆலயங்களின் நிர்வாகிகள் இதற்கான விண்ணப்பப் படிவங்களை இணையவழியில் (Online) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பப் படிவங்களைப் பெறுவதற்கும் மேலதிக வழிகாட்டல்களுக்கும் 070 32 80 729 என்ற அமைச்சின் தொலைபேசி இலக்கத்தைத் தொடர்பு கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பிரதேச செயலகத்தில் ஒப்படைக்கும் போது, இந்து கலாசார திணைக்களத்தின் ஊடாக சட்டத்திற்கு உட்பட்டுப் பரிசீலிக்கப்பட்டு, மிக விரைவாக ஆலயப் பதிவு நடைமுறைகள் முன்னெடுக்கப்படும் என்றும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.









No comments