Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மருதனார் மட கொத்தணி - 11 நாளில் 93பேருக்கு கொரோனா!



மருதனார்மடம் கோரேனா வைரஸ் தொற்றுப் பரவல் கொத்தணியில் மேலும் 3 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று(டிசெ. 21) திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் இவர்களுக்கு தொற்று உள்ளதாக அறிக்கை கிடைத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இதன்மூலம் மருதனார்மடம் கோரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்ட 11ஆவது நாளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 93ஆக உயர்வடைந்துள்ளது.

ஊர்காவற்றுறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் மருதனார்மடம் பொதுச் சந்தைக்குச் சென்று வந்துள்ளார். சுயதனிமைப்படுத்தப்பட்ட அவரிடம் பெறப்பட்ட மாதிரியின் அடிப்படையில் அவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவரும் மருதனார்மடம் சந்தைக்கு சென்று வந்தவர்.

அத்துடன், மருதனார்மடம் சந்தை தொற்றாளருடன் நேரடித் தொடர்புடைய உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட இணுவிலைச் சேர்ந்தவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்ட மூவரும் கடந்த ஒரு வாரத்து மேலாக குடும்பத்துடன் சுயதனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டவர்கள் என அவர் சுட்டிக்காட்டினார்.

No comments