போதை பொருள் கடத்தல் சந்தேகநபர்களை கைது செய்ய சென்ற பொலிஸார் மீது கோடாரியால் தாக்க முயன்ற நபர் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் குறித்த நபர் படுகாயமடைந்துள்ளார். கண்டி தெல்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
போதை பொருள் கடத்தல் , கொள்ளை என்பவற்றில் ஈடுபடும் கும்பல் ஒன்று திகன ஹம்பகாவத்த பகுதியில் பதுங்கி இருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த இடத்தை சுற்றி வளைத்த போது அங்கிருந்த சந்தேகநபர் ஒருவர் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரை கோடாரியால் கொத்த முயன்றுள்ளார்.
அதன் போது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் குறித்த நபர் படுகாயமடைந்தார்.
படுகாயமடைந்த நபரை மீட்டு கண்டி வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த பொலிஸார் அங்கு பதுங்கி இருந்த நான்கு சந்தேகநபர்களை கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களில் ஒருவர் சிறையில் இருந்து தப்பிய கைதி ஒருவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments