Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பயணத்தடை விதிமுறையை மீறிய பச்சைப்பள்ளி நிர்வாக சபை இடைநிறுத்தம்!


யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்துள்ள முஹம்மதியா ஜும் ஆப் பள்ளிவாசலின் தலைவர் உட்பட அனைத்து நிர்வாகிகளையும், பொறுப்புதாரிகளையும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தம் செய்து விசேட நிர்வாக குழுவொன்றை நியமனம் செய்வதற்கு இலங்கை வக்ப்  சபை தீர்மானித்துள்ளது.  www.tamilnews1.com 

குறித்த பள்ளிவாசலில் கடந்த வெள்ளிக்கிழமை கொவிட் 19 பயணக் கட்டுப்பாடுகளை மீறி தலைவர் உட்பட 14 நபர்கள் பள்ளிவாயலில் ஒன்று கூடி இருந்தமையின் காரணமாக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையினரால் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். www.tamilnews1.com 

இந்நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ஏ.பீ.எம். அஷ்ரப் வெளியிட்டுள்ள அறிக்கையிலையே  விசேட நிர்வாக குழுவொன்றை நியமனம் செய்வது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது,   www.tamilnews1.com 

பள்ளிவாசல்  தலைவர் உட்பட நிர்வாகிகள் தொடர்ந்தும் அரசாங்கத்தின் சட்டங்களை மீறி நடந்துள்ளனர் என்பதனாலேயே இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  www.tamilnews1.com 

பகிரங்க அறிவித்தல்களுக்கு மேலதிகமாக பள்ளிவாசலின் தலைவரை  திணைக்கள உத்தியோகத்தர்கள் நேரில் சந்தித்து எச்சரிக்கை செய்திருந்தும் இவ்வாறு பொறுப்பற்ற முறையில் நடந்திருப்பது மிகவும் கவலை தருகிறது.

சகல பள்ளி நிர்வாகிகளும் கொவிட் 19 சுகாதார வழிமுறைகளையும் பயணக்கட்டுப்பாட்டினையும் கருத்தில் கொண்டு எந்த சந்தர்ப்பத்திலும் பள்ளிவாசல்களில் மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்கவும்.  நிவாரணப் பணிகளுக்காக அவசியப்பட்டால் பாதுகாப்புத்துறை மற்றும் சுகாதாரத் துறையினரின் அனுமதியுடன் நிர்வாகிகள் மாத்திரம் ஒன்று கூடலாம்.  அதான் சொல்வதற்காகவும் கொவிட் 19 அல்லது நிவாரணம் தொடர்பான விஷேட அறிவித்தல்களைச் செய்யவும் முஅத்தின் அல்லது இமாம் மாத்திரம் பள்ளிவாயலில் நுழைய அனுமதிக்கப்படலாம். என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.   www.tamilnews1.com 

www.tamilnews1.com 

No comments