தற்போது அமுலில் உள்ள முழுநேர பயணத்தடையை ஜூன் 14ஆம் திகதிக்கு பின்னரும் தொடர்வதற்கு எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என இராணுவ தளபதி சவீந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
சமூக ஊடங்களில் முழு நேர பயணத்தடை 14ஆம் திகதிக்கு பின்னரும் நீடிக்கப்படும் என வெளியாகி வரும் செய்திகள் தொடர்பில் தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
முழுநேர பயணத்தடையை மேலும் நீடிக்கும் தீர்மானம் இதுவரையில் எடுக்கப்படவில்லை. முன்னர் அறிவித்தது போல எதிர்வரும் 14ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு பயண தடை தளர்த்தப்படும்.
பயண தடைகள் தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கவில்லை. அது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் பட்சத்தில் ஊடகங்கள் வாயிலாக அறிவிப்போம் என தெரிவித்தார்.







No comments