கிரேன் ஊடாக மரக்குற்றிகளை இறக்கிக்கொண்டிருந்த வேளை கிரேன் கேபிள் அறுந்ததில் , மரக்குற்றிகள் விழுந்து ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கண்டி , கட்டுகஸ்தோட்டை பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் மர ஆலையில் பணிபுரியும் அக்குரானை பகுதியை சேர்ந்த ஊழியரே உயிரிழந்துள்ளார்.
குறித்த மர ஆலைக்கு கொண்டு வரப்பட்ட பாரிய மரக்குற்றிகளை கிரேனின் உதவியுடன் இறக்கிக்கொண்டு இருந்த வேளை திடீரென கிரேன் கேபிள் அறுந்ததில் , கீழே நின்ற ஊழியர் மீது மரக்குற்றி விழுந்து அவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் கிரேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
No comments