Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நோயாளர் காவு வண்டி லொறி விபத்து - 4 பேர் உயிரிழப்பு!


ஜெய்ப்பூர் அருகே விபத்தில் காயமடைந்தவரை ஏற்றிச்சென்ற நோயாளர் காவு வண்டி மீது எதிரே வந்த லொறி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியா - ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் நகரை சேர்ந்தவர் பல்ஜித் (28). இவர் இன்று தனது வாகனத்தில் சென்றபோது விபத்து ஏற்பட்டது. இதில் அவரது காலில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, நோயாளர் காவு வண்டி வரவழைக்கப்பட்டு பல்ஜித் ஆல்வார் நகரில் இருந்து ஜெய்ப்பூர் நகருக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அந்த நோயாளர் காவு வண்டியில் காயமடைந்த பல்ஜித் அவரது சகோதரர் பக்சந்த் மற்றும் உறவினர்கள் உள்பட மொத்தம் 6 பேர் பயணம் செய்துள்ளனர்.

நோயாளர் காவு வண்டி துஷா மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் சென்றபோது சாலையில் எதிரே வேகமாக வந்த லொறி - நோயாளர் காவு வண்டி மீது மோதியது.

இந்த கோர விபத்தில் பல்ஜித் அவரது சகோதரர் மற்றும் இரு உறவினர்கள் உட்பட 4 பேர்  பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 2 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments