முல்லைத்தீவு வவுனிக்குளத்தில் மீன் பிடிக்க சென்ற இளைஞன் படகு கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
அம்பாள்புரம் 5ஆம் கட்டை பகுதியை சேர்ந்த விஜயரட்ணம் நிலவன் (வயது 24) என்பவரே உயிரிழந்துள்ளார்.
வவுனிக்குளத்தில் மீன் பிடிக்க சென்ற வேளை , படகு கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி குறித்த இளைஞன் காணாமல் போயிருந்த நிலையில் , குளத்தினுள் தேடுதல் மேற்கொண்ட நிலையில் இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்ட இளைஞனின் சடலம் , மாங்குளம் வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் , பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments