அக்மீமன, அங்கொக்காவல பிரதேசத்தில் குடும்ப தகராறு காரணமாக மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் , பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
குறித்த பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்றில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட குடும்ப தகராறு வாய்த்தர்க்கமாகி கத்திக்குத்தில் முடிடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கணவரின் கத்திக்குத்துக்கு மனைவி உயிரிழந்ததை அடுத்து கணவன் பொலிஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்த நிலையில் அவரை பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments