நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘Go Home Gota’ போராட்டத்தின் பிரதிநிதிகள் குழு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கண்டி மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடாதிபதிகளை சந்தித்துள்ளனர் .
ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக சங்க மாநாட்டு ஆணை பிறப்பிக்குமாறு பிரதிநிதிகள் பிரதம பீடாதிபதிகளிடம் கோரிக்கை விடுத்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட கௌரவப் பட்டங்களைத் திரும்பப் பெறுமாறும் கோரிக்கை விடுத்துள்ளதோடு அவர்களுக்குத் தொடர்புள்ள எந்தவொரு மத நிகழ்வுகளிலும் கலந்து கொள்ள வேண்டாம் எனவும் பிரதம தலைவர்களிடம் தெரிவித்துள்ளனர்.
No comments