Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

கோண்டாவிலில் திருடப்பட்ட கட்டட பொருட்கள் மீட்பு!


யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோண்டாவில் பகுதியில் திருடப்பட்ட 20 இலட்சம் ரூபா பெறுமதியான கட்டடப் பொருட்கள் கோப்பாய் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. 

கடந்தவாரம் கோண்டாவில் பகுதியில் ஒப்பந்தகாரர் ஒருவரினால் வீடு ஒன்றில்  வேலை செய்யப்பட்டுக் கொண்டிருந்த  வீட்டில் வைக்கப்பட்டிருந்த பெறுமதியான நில மாபிள்கள்  ,கழிவறைக்கு  பயன்படுத்தும் மாபிள் உபகரணங்கள் , மின் மோட்டார் மற்றும் மின் வயர்கள் இலத்திரனியல் உபகரணங்கள் உள்ளடங்களாக சுமார் இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டமை தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. 

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் திருடப்பட்ட பொருட்களை மீட்டுள்ளனர்.அத்துடன் சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர். 

No comments