ஐ. நா தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள இரண்டு முன்னணி பாடசாலைகளில் மாணவர்களை விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சி இடம்பெற்றது.
யாழ்ப்பாண லயன்ஸ் கழகத்தின் தலைவர் லயன் கு. ஜெயந்தன் தலைமையில் குறித்த நிகழ்வுகள் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் சிறப்புப் பேச்சாளராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளர் திரு சங்கரப்பிள்ளை ரவி அவர்கள் கலந்துகொண்டதுடன், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் சிறப்புப் பேச்சாளராக யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பி பாலசுந்தரம்பிள்ளை கலந்துகொண்டார்.
No comments