Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

மகனுக்கு பெண் பார்க்க சென்றவர் , பெண்ணின் தாயை திருமணம் செய்து தருமாறு அடம்பிடிப்பு!


மகனுக்கு பெண் பார்க்க போனவர் , பெண்ணின் தாயை தனக்கு மனம் முடித்து வைக்குமாறு தரகரை வற்புறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. 

கேகாலை பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, 

கேகாலை பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் மனைவி உயிரிழந்த நிலையில் தனது மூன்று ஆண் பிள்ளைகளுடன் வசித்து வந்த நிலையில் இரு மகன்கள் திருமணம் செய்து பெண் வீட்டிற்கு சென்ற நிலையில் கடைசி மகனுடன் வசித்து வந்துள்ளார். 

கடைசி மகனும் வேலை விடயமாக வேறு மாகாணத்தில் தங்கி இருப்பதனால் , தனிமையிலையே அவர் வீட்டில் வசித்து வருகின்றார். 

இந்நிலையில் கடைசி மகனுக்கு திருமணம் செய்யும் நோக்குடன் தரகர் ஊடாக பெண் பார்த்து , மகனுடன் பெண் பார்க்க பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். 

பெண் வீட்டிலும் பெண்ணின் தகப்பன் உயிரிழந்த நிலையில்,  மூன்று பிள்ளைகளில் இருவர் திருமணம் செய்து வேறு இடங்களில் வசிக்கின்றார்கள். பெண்ணும் அவரது தாயாரும் மட்டுமே அந்த வீட்டில் வசித்து வருகின்றார்கள் 

பெண் பார்த்து முடிய ,பெண்ணின் தாயின் தொலைபேசி இலக்கத்தை பெற்றுக்கொண்டவர் மகனுடன் கதைத்து விட்டு தகவல் தெரிவிக்கிறேன் என வீடு திரும்பியுள்ளார். 

பின்னர் பெண்ணின் தாயுடன் அடிக்கடி தொலைபேசியில் உரையாடி வந்துள்ளார். 

இந்நிலையில் ஒரு சில வாரங்களுக்கு பின்னர் , தரகர் திருமண ஏற்பாடுகளை செய்வோமா என கேட்ட போது , தனக்கு பெண்ணின் அம்மாவை பிடித்து இருக்கிறது. அவாவும் தனிமையில் இருக்கிறா , நானும் தனிமையில் இருக்கிறேன். எனவே எங்கள் இருவருக்கும் திருமணத்தை பேசி முடி என தரகருக்கு 25 ஆயிரம் ரூபாய் பணத்தினை கொடுத்துள்ளார். 

பணத்தினை பெற்றுக்கொண்ட தரகர் கிடைத்தவரை இலாபமே என இரு வீட்டு பக்கமும் தற்போது செல்வதில்லையாம். 

No comments