கட்டுநாயக்க விமான நிலையத்தில் துப்பாக்கியுடன், 58 வயதுடைய மாலைத்தீவு பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் இருந்து நேற்றைய தினம் மாலைத்தீவுக்கு செல்லவிருந்த விமானத்தில் பயணிக்க இருந்தவேளை, அவரது பொருட்களை ஸ்கேன் செய்து பார்த்ததில் ரிவோல்வர் ரக துப்பாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments