Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

ஓய்வு பெற்றார் யாழ்.மாவட்ட செயலர்


யாழ் மாவட்ட செயலகத்தின் மாவட்ட செயலராக கடமையாற்றி ஓய்வு பெற்று செல்லும் அம்பலவானர் சிவபாலசுந்தரனுக்கு இன்றைய தினம் வியாழக்கிழமை  யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் பிரியாவிடை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

யாழ் மாவட்ட செயலகத்தின் முன்றலில் இருந்து தமிழர்களின் பாரம்பரிய தமிழ் கலை வடிவங்களுடன் வரவேற்கப்பட்டு தொடர்ச்சியாக கடமையினை உத்தியோகபூர்வமாக மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனுக்கு வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

தொடர்ந்து யாழ் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் பிரியாவிடை நிகழ்வுகள் இடம்பெற்றது.

இதன்பொழுது யாழ் மாவட்ட செயலரின் நினைவுகளை தாங்கிய "அருமருந்தென்ன "என்ற தலைப்பிலான இறுவட்டு மாவட்ட செயலகத்தின் உத்தியோகத்தர்களால் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.

யாழ் மாவட்ட செயலராக கடந்த  2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்  தனது  கடமைகளை பொறுப்பேற்ற மாவட்ட செயலர் 1992 மார்கழி மாதம் அரச சேவையில் இணைந்து கொண்டார் .1995 ஆம் ஆண்டு இலங்கை நிருவாக சேவையில் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.









No comments