Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கொழும்பில் இருந்து குடும்பத்துடன் யாழ் வந்துவர் போலி நாணய தாள்களை அச்சிடும் இயந்திரத்துடன் கைது


கொழும்பில் இருந்து குடும்பத்துடன் யாழ்ப்பாணம் வந்து, போலி நாணய தாள்களை அச்சிடும் இயந்திரத்தை விற்பனை செய்ய முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த நபர் கைது செய்யப்பட்டதை அறிந்த அவரது குடும்பத்தினர் தலைமறைவாகியுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, 

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு குடும்பத்தினருடன் வருகை தந்த நபர் ஒருவர் அரியாலை பகுதியில், நாள் வாடகைக்கு வீடொன்றினை பெற்று குடும்பத்தினருடன் தங்கியுள்ளார். 

இந்நிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை குறித்த நபர் திருநெல்வேலி சந்தைக்கு அண்மித்த பகுதியில் போலி நாணய தாள்களை அச்சிடும் இயந்திரம் , மற்றும் நாணயத்தாள்களை அச்சிடுவதற்கு பயன்படும் தாள்கள் என்பவற்றை நபர் ஒருவருக்கு விற்பனை செய்யும் நோக்குடன் காத்திருந்த போது , கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் நபரை கைது செய்ததுடன் அவரிடம் இருந்த பொருட்களையும் மீட்டனர். 

கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை , அவர் குடும்பத்துடன் அரியாலை பகுதியில் தங்கியிருப்பது தெரிய வந்து , குறித்த வீட்டிற்கு பொலிஸ் குழு விரைந்த போது, வீட்டில் இருந்தவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments