Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

விபத்தில் பல்கலை மாணவி உயிரிழப்பு


கொழும்பு - கண்டி பிரதான வீதி  மங்கலகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர்.

கொழும்பிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த லொறி ஒன்று எதிர்த் திசையில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது முச்சக்கரவண்டி சாரதியும், முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரும்  காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

ரம்புக்கனை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த யுவதி  ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மாணவி என்றும்,  இன்னும் சில நாட்களில் தனது பட்டப்படிப்பை முடிக்க தயாராகியிருந்தார் என கூறப்படுகிறது.

உயிரிழந்தவரது சடலம் கேகாலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட கேகாலை பொலிஸார் லொறியின் சாரதியை கைது செய்துள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments