யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் காரைநகர் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவையானது காரைநகர் பிரதேச செயலாளர் ந. ரஞ்சனா தலைமையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காரைநகர் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இந்நடமாடும் சேவையில் ஆட்களைப் பதிவுசெய்யும் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள் (தேசிய அடையாள அட்டை), ஓய்வூதியம் தொடர்பான சேவைகள்,
பிறப்பு, இறப்பு மற்றும் உத்தேச வயது சான்றிதழ்கள் தொடர்பான சேவைகள், மோட்டார் வாகன பதிவு மற்றும் வாகன வருமான அனுமதிப்பத்திரம் தொடர்பான
சேவைகள், பிரதேச சபைகளால் வழங்கப்படும் சேவைகள், பொலிஸ் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள் , மனிதவள அபிவிருத்தி தொடர்பான சேவைகள் மற்றும் தொழில் வழிகாட்டல்கள், திறன் அபிவிருத்தி தொடர்பான சேவைகள் மற்றும் தொழிற்கல்வி வழிகாட்டல்கள் (NVQ), சமூக சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள், முதியோர் தேசிய செயலகத்தினால் வழங்கப்படும் சேவைகள், காணி தொடர்பான சேவைகள் , மருத்துவ முகாம் போன்ற சேவைகள் வழங்கப்பட்டன.
மேலும் பொதுமக்களுக்கு கண்புரை பரிசோதனை (Cataract) இடம்பெற்று இலவச மூக்குக்கண்ணாடிகள் வழங்குதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் கலந்து கொண்டதுடன், காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் கிருஷ்ணன் கோவிந்தராசன் ,மாவட்ட மேலதிக செயலர் கே. சிவகரன், உதவி மாவட்ட செயலாளர் , மாவட்ட செயலக பிரதம கணக்காளர், காரைநகர் பிரதேச சபை செயலாளர் , பதவிநிலை உத்தியோகத்தர்கள் , மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் சேவைகளைப் பெற்றுக் கொள்ள வந்த பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
No comments