Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Monday, June 30

Pages

Breaking News

யாழ். போதனா வைத்திய சாலையில் 1000 பேருக்கு கண்புரை சத்திர சிகிச்சை


யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் 1000 பேருக்கு கண்புரை சத்திர சிகிச்சை செய்வதற்கான செயற்திட்டம் நேற்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பமானது. 

அதன் ஆரம்ப நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் கலந்து கொண்டார். 

உலக பார்வை தினத்தை முன்னிட்டு, நேற்றைய தினம் தொடக்கம் எதிர்வரும்  மூன்றாம் திகதி வரை யாழ் போதனா வைத்தியசாலை கண் சிகிச்சை வைத்திய நிபுணர் மலரவனின் நெறிப்படுத்தலில் ஆயிரம் பேருக்கு கண்புரை சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது. 

 யாழ்ப்பாண சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இருந்து 50க்கும் மேற்பட்டோரும் மற்றும் அனுராதாபுரம் மதவாச்சி,பதவியா பகுதிகளில் இருந்து 170 க்கும் மேற்பட்டோருக்கு நேற்றைய தினம்   சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.