Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Thursday, June 19

Pages

Breaking News

340 கிலோ ஹெரோயினுடன் ஐந்து இலங்கையர்கள் இந்தியாவில் கைது!

 


கொச்சி கடற்பரப்பில், இலங்கை படகொன்றிலிருந்து சுமார் 340 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பாக ஐந்து இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்று (திங்கட்கிழமை) இந்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையிலேயே சுமார் 340 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த போதைப்பொருள்,  சிவப்பு நிற ஈரானிய படகில் இருந்து இலங்கை படகுக்கு மாற்றப்பட்டதாக சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரவித்துள்ளனர்.

இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி, சர்வதேச சந்தையில் 1,750 கோடி இந்திய ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.